Monday, October 31, 2011

பரத்வாஜ்ஜின் நூதன இசை முயற்சி

தமிழ்த் திரைப்பட இசையமையப்பாளர் பரத்வாஜ் ஒரு நூதன
பின்னணி இசைக் கோர்ப்பை நடத்தி முடித்திருக்கிறார்.

இவர் தமிழ்ப் படங்களுக்கு நல்ல இசையைக் கொடுத்திருக்கிறார்.

1928 வருடம் பிரிட்டன்,ஜெர்மனி,இந்தியாவின் கூட்டுத்தயாரிப்பில் உருவான பேசாத படம்(silent movie) Taj Mahal, the Romance of India திரையில்(சிங்கப்பூர்) ஓடுகிறது.
2000 சிறப்பு விருந்தினர்கள் பார்வையிடுகிறார்கள்.அதற்கு பரத்வாஜ் உருவாக்கிய பின்னணி இசை,லலிதாவைத்தியநாதன் என்பவரின் மேற்பார்வையில்(conductor) லைவ்வாக இசைக்கப்படுகிறது.

ஒரே ஒரு வித்தியாசம். இசையமைப்பாளர்கள்(ஆர்கெஸ்டரா) முதுகிற்கு பின்னால் திரை.அவர்கள் லலிதா வைத்தியநாதனின் கை அசைவை பார்த்தபடி வாசிக்கவேண்டும். படம் ஒன்றரை மணி நேரம்.


இதற்கு கன்னபின்னாவென்று ஹோம் வொர்க் செய்திருக்க வேண்டும்.



பரத்வாஜ்ஜின் முயற்ச்சிக்குப் பாராட்டுக்கள்.


Sunday, October 30, 2011

இளையராஜா - King of Heavenly Hummings-3

இந்தப் பதிவில் மீண்டும் இசைஞானி இளையராஜாவின் ரம்மியமான ஹம்மிங் பற்றிய பார்வை.இதில் 39 இசைத் துண்டுகள் உள்ளது.ப்ளே லிஸ்டை க்ளிக்கினால் பட்டியல் கிடைக்கும்.

ஹம்மிங்-1

ஹம்மிங்-2

மனது வருட ஹம்மிய முகம் தெரிந்த/தெரியாத தேவதைகள்/தேவர்களுக்கு.

ஒவ்வொரு ஹம்மிங்கையும் கண்களில் தொட்டு ஒற்றிக்கொள்ளலாம்.அவ்வளவு அழகு! முக்கியமாக full of soul...soul... soul...!

இளையராஜா ஹம்மிங்கை ஒரு fashion designer போல் வடிவமைக்கிறார்.சலித்துப் போன ஒரே மாதிரி பாடல்கள் நம் தமிழ் பட உலகில் தவிர்க்க முடியாது.அதில் முடிந்த அளவு சாயல் அடிக்காதபடி அமைக்கிறார்.

வண்ணமயமான கற்பனைத் திறன் இருப்பதால் நிறைய கலவைகளில்(பெர்மிட்டேஷன் அண்ட் காம்பினேஷன்) கொடுக்கிறார்.இல்லாவிட்டால் காபி அன்ட் பேஸ்ட் ஆகிவிடும்.

குறிப்பு:  மேலே என் பாடல் பற்றிய குறிப்பு வரும். கிழே ஆடியோ துண்டு.

கிழ் வரும் இரண்டு பாடல்களும் ஒரே மாதிரி ரொமாண்டிக் கோரஸ் டூயட். ஆரம்பம் மற்றும் 1.11 பிறகு வரும் ”தனதந்த”வைக் கவனியுங்கள்.வெவ்வேறு மெட்டில் வரும்.ராகங்கள் வேறுபடுகிறது.அதனால் ராஜாவுக்கு இதெல்லாம் சுலபம்.

Humm-3-Vaathiyar Veetu Pillai-89-Oru Pooncholai.mp3

Humm-3-Periya Veetu Pannakkaran-90-Malligaiye.mp3

ஹம்மிங் என்பது இயற்கையில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். காடுகளில் பறவைகளின் கூவல்கள்தான் அடிப்படை.இந்து மத நூல்கள்,பைபிள், குரான் போன்றவைகளில் வானத்திலிருந்து அமானுஷ்ய குரல்கள்(அசிரீரி) தேவதூதர்களுக்கு கட்டளைகள் இட்டதாகப் படித்திருக்கிறோம்.

வானத்து தேவதைகளின் ஆசிர்வாதங்களும் அழுகைகளும் ஹம்மிங் வடிவில் பாடல்களில் கொடுக்கப்படுகிறது.புது பரிமாணம் பெறுகிறது பாடல்கள்.

கிழ் வரும் ஹம்மிங் ஓலத்தில் ஒரு “மாபெரும் சோகம்” வெளிப்படுகிறது.வானத்து தேவதைகள் கசிந்துருகுகின்றன.
Humm-3-Devan Magan-92-Vaanam Thottu Pona.mp3

சில ஹம்மிங்கள் ”பிகர்”கள் கொடுக்கும் கிளுகிளுப்பாகிறது.(சொர்க்கம் மதுவிலே) .
Humm-3-Sattam En Kaiyil-78-SorgamMathuvile.mp3

1980/90 ஹம்மிங்குகள் slow motion (வெள்ளை உடை அல்லது சாதா உடை) காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.சின்னப்புறா ஒன்று பாட்டு.
Humm-3-Anbe Sangeetha -79- Chinna Pura Ondru.mp3




இது ஒரு பிரமிக்க வைக்கும் ஹம்மிங்.0.19ல் ஹம்மிங் போன்ற இசையும் மற்றும் கார்த்திக்கின் ஹம்மிங்கும் ஒன்றின் மேல் ஒன்று பின்னப்பட்டு நம்மை சிலிர்க்க வைத்தப்படி அமானுஷ்யமாகக் கடக்கிறது. Awesome maestro!
Humm-3-Azhagi-02-Oliyilae Therivadhu Devadhaya.mp3

“ஏரியிலே”  வெஸ்டர்ன் கிளாசிகல் அமைப்புப்படி ஒரு ஒழுங்குடன் அழகாக இனிமையாக இருக்கிறது.
Humm-3-Karaiyellam Sen-81-EriyileElandhaMaram.mp3

31 வருஷம் ஓடிவிட்டது.மெருகு அழியவில்லை.வெஸ்டர்ன் கிளாசிகல் கலவையில் வந்து அசத்துகிறது.
Humm-3-Nenjathe Killathe-80-UravenumPuthiya.mp3

உற்றுக் கேளுங்கள். கர்நாடாக மெலடியில் ஹம்மு(கொஞ்சு)கிறார்கள்.அதுவும் கடைசி 0.30-0.33 So sweet !(hear the echo when they hum)
Humm-3-Rajakumaran-94-SithakathiPookale.mp3

சம்பிரதாயமான “ஏலேலோ ஐலேசா”வை வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறார்.முத்தம்மாவுக்கு எதிரொலியாக வரும் ஹம்மிங் heavenly.0.26-0.40அருமை.
Humm-3-Kattumarakaran-95-VetriVetri.mp3

ஹம்முவது யாரு? அட நம்ம...................? ஸ்டைலை கவனியுங்கள்.
Humm-3-Kalioonjal-97-Varna Vrindavanam.mp3

ஏய்... நான்சென்ஸ் மீசிக் டைரக்டர்ஸ்! மீசிக்னா அப்ப பறிச்ச ரோஜாப் போல சில்லுன்னு பிரஸ்ஸா இருக்கனும்.கீழ வர பிட்ட லிஸ்ஸன்யார்.
சும்மா ஜிகுஜிகுஜிகுன்னு போகும்.0.23 பைபாஸ்ல ஒரு கிடார் ரொமாண்டிக்கா கப்லிங்க் ஆவுது பாரு. கேட்டுட்டு திரும்பி பாக்காத ஓடுங்க! பிச்சுப்புடவன் படுவா!

ஞானி சார் ஸ்டார்ட் மீசிக்...! ஓ மை ஆல் கேர்ள்ஸ்.. ப்ளிஸ் ஹம்ஸ்ஸ!ஜஜம்ஜம்ஜம்....ஜஜம்ஜம்ஜம்.... ஜஜம்ஜம்ஜம்....
கவுண்டர் சொல்வதுபோல் என்னஒரு majestic flow!
Humm-3-Poonthotta Kavalkaran-88-ParamalPaartha.mp3

Humm-3-Mangalam Nerunnu-84-Rithubheda Kalpana.mp3

Humm-3-Ingeyum Oru Gangai-SolaiPushpangale.mp3
Humm-3-VellaiRoja-83-DevaninKovil.mp3


Oh.. Jency where are you(நீ எவ்விட போயி)?நான் பார்க்கும் தமிழக கிராமத்து வயல்களில் “லாலல்லல” இன்னும் ரீங்காரம் இடுகிறது. Stunning Jency!
Humm-3-Puthiyavaarpugal-79-Idhayampoguthey.mp3

Humm-3-Moodram Pirai-82-VaanengumVanna.mp3

Humm-3-Puthiya Raagam-91-Vaadumo Oviam.mp3

முழு பாட்டையும் கேட்டுப்பாருங்கள்.அள்ளிக்கொண்டு போகும் இசை.சித்ராவின் குரலில் என்ன கனிவு/பக்தி.Hats off Chithra!.
Humm-3-Kochu Kochu-00- Sivakaru.mp3

Humm-3-Thaipongal-80-Theerthakaraithanele.mp3

ராஜாவின் “பெல்பாட்டம்” கால குரல்.
Humm-3-ThaiPongal-80-KanMalargalinAlaipithal.mp3
Humm-3-Hey Ram-00-Isaiyil Thodanguthamma.mp3

என்ன ஒரு கர்வமான ஹம்மிங்(எல்லாம் எனக்கேதான்).தாளமும் மிகுந்த வீரியத்துடன் அடிக்கப்படுகிறது.அது ஒரு தனிமொழி பேசுகிறது.
Humm-3-Varusham Pathinaru-89-PazhamudhirCholai.mp3

Humm-3-Sollathudikathu Manasu-88-Yenathu Vizhivazhiyil.mp3

Humm-3-Sivappu Rojakkal-78-NinaivoOruParavai.mp3

Humm-3-KochuKochu Santo-00-Kodamanjin.mp3

ராஜாவின் மாஸ்டர் பீஸ்
அழகு+ஸ்டைல்+ஆத்மா+குரல்+வரிகள்+மேதமை இவ்வளவும் அடங்கிய ஒரு premium package.

ஹம்மிங் வியூகத்தில் நம்மை சுழலவிட்டு கிறங்கடிக்கிறார். என்ன ஒரு அரேஞ்மெண்ட்!இதில் கவுண்டர் பாயிண்டும் உண்டு. ஒரு சமயத்தில் இரண்டு மெட்டு.
Humm-3-Avatharam-95-Thendral.mp3

Humm-3-Agninatchthiram-88-Rojapoo.mp3

Humm-3-Eththnai Konam83Alaipayuthe Kanna.mp3

Humm-3-En Mana Vaanil-02-Vayasu Vandha Valibanukku.mp3

Humm-3-IdhayaKovil-85-OororamaAathuPakkam.mp3

எல்லா பதிவுகளிலும் வழக்கமாக சொல்வது. இதிலும் சொல்கிறேன். இசைகோர்ப்புக்களில் அசட்டுத்தனம் மற்றும் லூசுத்தனமாக அங்கும் இங்கும் கிழிந்து தொங்கும் அபத்தங்கள் இல்லாமல் நேர்த்தியாக கோர்ப்பது எப்பவுமே என்னை ஆச்சரியப்படுத்துகிறது.

Humm-3-Julie Ganapathy-03-Thani Konjam.mp3

Humm-3-Eramana Rojave-91-AthomegaOorvalam.mp3

Humm-3-Thendrale Ennai Thodu-86-KavithaiPaadu.mp3

Humm-3-Bharathi-00-NinnaiCharanadainthen.mp3

Humm-3-Aayiram Vasal Idhayam-Maharani Unai.mp3

அழகான கிராம பாடல் வரிகளும் அதன் எதிரொலி ஹம்மிங்களும் அற்புதம்.
Humm-3-Aathma-93-Velakku Vaippom.mp3

Humm-3-Selvi-85-YaaroYaaro.mp3

Humm-3-Raagangal Maaruvathillai-83-Vaan Meedhiley(new).mp3

Monday, October 24, 2011

இளையராஜா டப்பிங்- ராஜ் டிவிக்கு 10 தலை- மட சாம்பிராணி

ராஜ் டிவி தேன் குடித்த நரி மாதிரி ஆகிவிட்டது. அதற்கும் “இந்தியத் தொலைகாட்சிகளிலேயே” ஜுரம் வந்து பத்து தலை முளைத்துவிட்டது.தீபாவளி அன்று ராஜ்ஜில் “ராவணன்” படம்.டப்பா படம்.ஒரு மாதமாக விளம்பரம் போட்டுத் தாக்குகிறது.தலை(பத்து?) தாங்க
முடியவில்லை.


இந்த வருடம் தீபாவளிக்கு நிறைய சேனல்களில் “இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே” ஹிட் படங்கள் திரையிடப்பட உள்ளது. இதற்கு முன் வருடங்கள் எல்லாம் ”ஹிட்” படங்களை சன் டிவி ஆக்கிரமித்து ”அட்டு” படங்களை மற்ற சேனல்கள் போடும். காட்சி மாறிவிட்டது.

When Cat is away(out!) Rats are happyயா! அல்லது வேறா?


மட சாம்பிராணி

இதைப் பற்ற வைக்க ரொம்ப நேரம் பிடிக்கும். அது மாதிரி சொல்வதைப் புரிந்துக்கொள்ளாது முழிக்கும் மனிதர்களை “ சரியான மட சாம்பிராணி” என்று சொல்லும் வழக்கம் உண்டு.டியூப் லைட்?

தலையில் பச்சைத் துணிக்கட்டு,தாடி,கையில் ஒரு தட்டு அதில் சாம்பிராணி தூப ஸ்டாண்ட்,மறு கையில் மயில் பீலியுடன் கடை கடையாக ஏறி சாம்பிராணி புகை போடும் முஸ்லீம் அன்பர்களைப் பார்த்திருக்கலாம்.
பில்லிசூனியம்,திருஷ்டி,ஜலதோஷம்,பூச்சி,ஐஸ்வர்யம் போன்றவைகளுக்கு போடப்படுகிறது.

மேலும் இதில் “தெய்வீக மணம்” வீசுவதால் எந்த மதத்தவரும் எதிர்ப்பதில்லை.


        
நன்றி: பாரத்ஸ்டூடண்ட்.காம்
        
ரொம்ப வருடம் முன்பு நடந்தது.

ஒரு துணிக்கடைக்கு வழக்கமாக ஒரு முஸ்லீம் பெரியவர்(வீடியோவில் வருபவர் அல்ல) மூன்று நாளுக்கு ஒரு முறை வருவார்.ஒரு நாள் (பெரிய கடை) இருக்கும்போது இவரிடம் கேட்டேன் “நீங்க ஒரு நாளைக்கு நிறைய ஏரியா உங்க பசங்களோடு போய் பிரிச்சுகிட்டு நிறைய சம்பாதிக்கலாமே. ஏன் நீங்க மட்டும்தான் அதுவும் கொஞ்ச ஏரியாத்தான் போறீங்க?”
        
”எனக்கு வர்ற காசு போதும். பிசினஸ்ஸா பண்ணல.புகைப் போடும்போது இவங்க நல்லா இருக்கனம்னுதான் போடறேன்.என்ன மாதிரி எவ்வளவோ பேர் இருப்பாங்க.தம்பி, நீங்க ”சம்பாதிக்கலாமே”ன்னு கேட்கும்போதே மதிப்பு போயிடுது.என் குணத்தப் பாத்துதான் என்னோட இரண்டு பசங்க இதே ஏரியாவுல் துணி கடைல சூப்பர்வைஸ்ஸரா இருக்காங்க.அடுத்தவங்க நல்லா இருக்க புகைப்போட்டது நமக்கு நல்லது நடக்க வச்சுட்டாரு அல்லா”

கேட்டவுடன் எனக்கு மந்திரித்துவிட்டார் போல் இருந்தது.
        
ஸ்ரீ ராம ராஜ்யம் சினிமா


தெலுங்கில் ரிலீசாகப்போகும் படம். பாலகிருஷ்ணா நயந்தாரா நடிக்கிறார்கள்.இசை இசைஞானிஇளையராஜா.பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆந்திராவில்.இதற்கு ரீரிகார்டிங்கிற்கு ராஜா ரொம்பவும் சிரத்தை எடுத்துக்கொள்வதாக செய்திக்குறிப்புகள் கூறுகிறது. அது:

// Ilayaraja usually does re-recording with two keyboards. But for this film, he opted to use live instruments, with 70 musicians. He refused to go down the beaten track set by previous mythology based movies, and did something new & unique, almost like he re-did the screenplay with his rerecording. Producer says IR did the rerecording as if he was doing research in music.//


படங்கள்:









Friday, October 14, 2011

திருந்துங்கடா டேய்!

யார் யாரோ மினி டெம்போவில் கழுத்தைச் சுற்றி கலர் துணியுடன் இறங்கி வீடுவீடாக படியேறி கைக்கூப்பி ஓட்டு கேட்கிறார்கள்.பொத்தம் பொதுவாக ஏரியா பிரச்சனைகளை உடனடியாக தீர்த்துவிடுவதாக உறுதி அளிக்கிறார்கள்.

உள்ளாட்சி தேர்தல் பிரசாரங்கள் தெருக்களில் காதைப்
பிளக்கிறது.கைவிசிறி,fan,விளக்கு, முறம்,சைக்கிள்,பம்பரம்,நாற்காலி,கொடை,ஸ்டவ் என்று வீட்டு தட்டுமுட்டு சாமான்கள் சின்னமாக போஸ்டரில் தெரிகிறது.நகரம் ஆனாதால் யாரும் காலில் விழுவதில்லை.நகரத்தில் தன்னுடைய வார்டு மெம்பர் யார் என்று எவ்வளவு பேருக்குத் தெரியும்.

குப்பைக் கூளங்கள், சாக்கடைகள், மேடு பள்ளங்கள், ஆடு மாடு நாய்கள் உலாத்தும் ரோடுகள்,ஆக்கிரமிப்புகள் இவைகளிடையேதான் இந்தப் பிரசாரம் நடக்கிறது.

கவுன்சிலர்கள் வேலை செய்யாமல் இல்லை. ஏதோ செய்கிறார்கள் ஆனால் மீண்டும் குப்பை கூளங்கள், சாக்கடைகள், மேடு பள்ளங்கள், ஆடு மாடு நாய்கள் உலாத்தும் ரோடுகள்,ஆக்கிரமிப்புகள்..........

கட்சி சாராத வேட்பாளர்கள் கும்பல் கும்பலாக நிற்கிறார்கள்.”பொன்னான” வாக்குகளை “சிந்தாமல் சிதறாமல்”  போடச்சொல்லி "பணிவன்புடன்”
கேட்டுக்கொள்கிறார்கள்.

கட்சி சாராத வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு ஒரு முன் திட்டமோ,strategy,சிட்டிங் கவுன்சிலரின் குறைகளை உயர்த்திக் காட்டுதல்(highlight),வாக்களர்களை முன்னமே தெரிந்து வைத்துக்கொள்ளுதல் போன்றவைகள் ஏனோதானோ என்றுதான் இருக்கிறது.சுத்தமாக சிரத்தை இல்லை.

திருந்துங்கடா டேய்!
___________________________________________________________

வீட்டில் சுவற்றில் சாதாரண ஒரு பல்ப் ஹோல்டர் போடுவதற்கு கட்டணம் 65 ரூபாயாம்.காரணம் டிரில்லிங் மெஷின் வாடகை 30 ரூபாயாம்.90ன் இறுதியிலேயே டிரில்லிங் மெஷின் வந்துவிட்டது.”வெட்ரூம்பு” காலம் மலையேறி விட்டது.மார்வலிக்க”வெட்ரூம்பு”  வைத்து சுவற்றில் அடித்து ஓட்டைப்போட்ட எலக்ட்ரிஷியன்கள் பாவம் கிழவனாகி விட்டார்கள்.
என் எலக்ட்ரிஷியன் அவருடைய சொந்த மெஷினயே வாடகையாக காட்டி என் வேலையை முடித்தார்.சரி என்ஜாய் என்று விட்டுவிட்டேன்.

இப்போதெல்லாம் எலக்ட்ரிஷியன்(சென்னை) என்றாலே அவரின் அடிப்படை ஆயுதம் டிரில்லிங் மெஷின்.

திருந்துங்கடா டேய்!
___________________________________________________________

”செய்யும் தொழிலே தெய்வம் அதில் நமது திறமையே செல்வம்” என்று ஒரு சொலவடை உண்டு. என் பேண்டின் zip வேலை செய்யாததால் ஒரு டெய்லரிடம் கொடுத்து(காலை 9 மணி) மாற்றச்சொன்னேன். கூலி 40 ரூபாய் என்று சொல்லி மதியம் மூன்று மணிக்கு வரச் சொன்னார்.

ஆனால் சொன்னபடி தயார் ஆகவில்லை. மீண்டும் நாளை வரச்சொன்னார்.இப்படியே மூன்று நாள் ஆகிவிட்டது.கோபத்தில் திருப்பிக் கொடுத்துவிடும்படி சொன்னேன்.கொடுக்கும்போது “ பழைய துணி எடுத்தால் இதுதான் பிரச்சனை” என்று முணகியபடியே கொடுத்தார்.ஆனால் பேண்ட் இடுப்பில் எல்லா தையல்களும் பிரித்துப் போட்டபடி இருந்தது.ஒன்றும் சொல்லாமல் வாங்கி வந்துவிட்டேன்.

ஏன் இந்த சோம்பேறித்தனம்/அசிரத்தை?

1. பழைய துணி எடுக்க மாட்டோம் என்று முதலிலேயே சொல்லி இருக்க வேண்டும்.(கூட்டம் அதிகம் கிடையாது)
2.பழைய துணி என்றால் ஒரு அகெளரவம்
3.அகெளரவத்தால் அலட்சியம்
4.அலட்சியத்தால் அசிரத்தை/சோம்பேறித்தனம்/
5.அதனால் டெலிவரி லேட்/வேலை அரைகுறை
6.இவரிடம் வேலை செய்யும் கூலி டெய்லர்கள் ஓனரை மதிக்காமை(பழைய துணி எடுத்ததால்).ஒனர் இதில் தெளிவாக இல்லை.

திருந்துங்கடா டேய்!

Thursday, October 6, 2011

எங்கேயும் எப்போதும்....

எங்கேயும் எப்போதும் - சினிமா விமர்சனம்

தமிழ் சினிமா வரலாற்றில் பட முடிவில் 99% “சுபம்” போட்டுத்தான் முடிப்பார்கள்.பொழுதுபோக்க வரும் வெகுஜனங்கள் அதைத்தான் விரும்புவார்கள்.மக்கள் விரும்பாத சோகத்தோடு முடித்தப் படங்களின்  கடைசிக் காட்சிகளை “சுபமாக” எடுத்து இணைத்து வெளியிட்டும் உள்ளார்கள்.

ரொம்ப வருடத்திற்க்குப் பிறகு சோகத்தோடு முடியும் அதுவும் முக்கியமாக ஸ்டார் ஆகிவிட்ட நடிகை/நடிகர்களை வைத்து சோகத்தோடு முடிப்பது தைரியம் வேண்டும். அது “எங்கேயும் எப்போதும்” படம்.

எங்கேயும் எப்போதும் நல்லதும் கெட்டதும் நடப்பதற்கு
வெயிட்டிங் லிஸ்டில் காத்துக்கொண்டிருக்கிறது.அன்னியராக நேருக்கு நேர் பழகிய தருணங்கள்  முடிந்து பிரிந்து  நினைவு பொதிகளாகி நெஞ்சத்தில் மிதந்து ஒரு ஓரத்தில் காதல் சாரல் அடிக்க ஆரம்பிக்கிறது அமுதாவிற்கும் கெளதமமுக்கும்.அதைச் சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் அவரவர் ஊரில் தேடி அலைந்து கிடைக்காமல் ஏமாந்து எதிரெதிர் திசையில் பஸ்ஸில் பயணிக்க, பஸ்கள்  நேருக்கு நேர் கோரமாக மோதி விபத்தாகி நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.

 தவிர இவர்களுடன் பிரயாணம் செய்த மற்ற பிரயாணிகளின் கனவுகள் ஆசைகள் திட்டங்கள் கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் சின்னபின்னமாக்கிவிடுகிறது இந்த நேருக்கு நேர் மோதல் விபத்து.இதில் மற்றொரு காதல் ஜோடியும் அடக்கம்.

 
படத்தின் முக்கியமான விஷயம் கதையின் freshness.விபத்தின் பின்னணியில்  சொல்லப்பட்ட காதல் கதை.அதுவும் சென்னை பிசி ரோடில்இருவரும்
சர்வ சாதாரணமாக (அனன்யா /சர்வா) நடந்தபடி  பிரயாணித்தபடி கதையை நடத்திச் செல்வது இன்னும் fresh.அந்தப் பக்கம் திருச்சியில் அஞ்சலியும் ஜெய்யும்.

இடை இடையே வீடியோ கோச் பஸ் விர் விர்ரென்று நெடுஞ்சாலையில் பறப்பதைக் காட்டுவது speed படத்தை நினைவூட்டுகிறது.சாகும் தருவாயில் தன் காதலன் பெயரைத் தெரிந்துக்கொள்ள முனகி கேட்பதும் பிறகு கண்ணீர் துளி வழிவதும் ரொம்ப டச்சிங்.

சொல்ல வந்த விஷயத்தை சுவராசியமாக சொன்னாலே வெற்றிதான்.

முக்கிய பாத்திரங்களாக வரும் நான்குபேரும்
அனன்யா(அமுதா), அஞ்சலி(மணிமேகலை), ஜெய்(கதிரேசன்), கெளதம்(சர்வா) பின்னி இருக்கிறார்கள்.
முன் ஜாக்கிரதை முத்தம்மாக்களாக வரும் அஞ்சலி மற்றும் அனன்யா நடிப்பு அருமை.

Anjali has killing look. Ananya has சமத்துப் பெண் look.

படம் முடிந்து வீடு திரும்பிய பிறகும் நான்கு பேரும் நினைவில் சுழன்று சுழன்று அடிக்கிறார்கள்.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. விபத்தை முதலிலேயே cut shot மூலம் சொல்லாமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தால் கிளைமாக்ஸில் தாக்கம் அதிகம் இருந்திருக்கும். உடல் உறுப்புக்களை தானம் செய்வதில் ஆர்வம் காட்டும் குணம் உள்ள  அஞ்சலி கதிரேசனின் சம்பளப் பணத்தை இப்படித் தண்ணீராக செலவு செய்வது நெருடுகிறது.

B.E. படித்த அமுதா (அனன்யா) ரொம்ப உஷாராக இருப்பது ஓவர்.

படத்தின் மிகப் பெரிய மைனஸ் பின்னணி இசை.